Sunday, July 24, 2011

சினேகன் கவிதைகள் - முதல் மழைத்துளி

சில மழைத்துளி
சுடும்...
சில மழைத்துளி
குளிரும்...
சில மழைத்துளி
மணம் வீசும்...
சில மழைத்துளி
நேசம் பேசும்...
சில மழைத்துளி
பசி போக்கும்...
சில மழைத்துளி
ருசிக்கும்...
சில மழைத்துளி
கவிதை தரும்...
சில மழைத்துளி
கவலை தரும்...
சில மழைத்துளி
பகைக்கும்...
சில மழைத்துளி
நகைக்கும்...
இன்னும் பல
மழைத்துளி விழும்...
இன்னும் பல
வினை செய்யும்...
நீ என்னையும்
நான் உன்னையும்
பார்க்க நேர்ந்த
அந்த கணத்தில் விழுந்த
முதல் மழைத்துளி மட்டும்
அப்படியே கிடக்கிறது...
ஈரம் காயாமலும்
எதுவும் நிகழ்த்தாமலும்
மனசுக்குள் விழுந்த
அந்த முதல் துளி
இருக்கும்வரை...
எத்தனையோ அடைமழையில்
குடையின்றி நடந்தபோதிலும்...
எந்த மழைத்துளியும்
அதுபோல்
நனைத்ததில்லை
இதுவரையில் என்னை...

No comments:

Post a Comment