Saturday, July 23, 2011

கண்ணதாசன் பாடல்கள் வரிகள்-7

பாடல்: மயங்குகிறாள் ஒரு மாது
பாடியவர்: பி சுசீலா
இயற்றியவர்: கண்ணதாசன்
திரைப்படம்: பாச மலர்

மயங்குகிறாள் ஒரு மாது - தன்
மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது
மயங்குகிறாள் ஒரு மாது
திருவாய் மொழியாலே...
திருவாய் மொழியாலே அன்பே அன்பே அன்பே அன்பே
திருவாய் மொழியாலே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா
(மயங்குகிறாள்)
தோழியர் கதை சொல்லித் தரவில்லையா
துணிவில்லையா பயம் விடவில்லையா
நாழிகை செல்வதும் நினைவில்லையா
நாழிகை செல்வதும் நினைவில்லையா
அன்பே அன்பே அன்பே அன்பே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா
(மயங்குகிறாள்)
பார்வையில் ஆயிரம் கதைசொல்லுவார்
படித்தவள்தான் அதை மறந்துவிட்டாள்
காதலை நாணத்தில் மறைத்துவிட்டாள்
காதலை நாணத்தில் மறைத்துவிட்டாள்
அன்பே அன்பே அன்பே அன்பே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா
(மயங்குகிறாள்)

No comments:

Post a Comment